உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரி 37வது பட்டமளிப்பு விழா

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரி 37வது பட்டமளிப்பு விழா

ஈரோடு: பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரி யின், 37வது பட்டம-ளிப்பு விழா நடந்தது. விழாவில், 2024ல் கல்லுாரி படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டம் அளிக்கப்பட்டது. சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பட்டதாரிகளுக்கு பட்டம், பதக்கம் வழங்கினார். விழாவில், 1,765 பட்டதாரிகள் (இளங்கலை-1,441, முதுகலை-324) பட்டம் பெற்றனர். படிப்பில் சிறந்து விளங்கி, உயர்தரம் பெற்ற, 98 பேருக்கு (இளங்கலை-82, முதுகலை-16) பதக்கம் வழங்கப்-பட்டது. விழாவில் கொங்கு வேளாளார் தொழில் நுட்பக் கல்வி அறக்கட்டளை தலைவர் குமாரசாமி, கல்லுாரி தாளாளர் இளங்கோ, அறக்கட்டளை பாரம்பரிய உறுப்பினர்கள், முதல்வர் பாலுசாமி, பல்வேறு துறை தலைவர்கள் மற்றும் கல்லுாரியின் பல்வேறு அமைப்புகளின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள் பங்-கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை