உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 5,398 சைக்கிள் வினியோகம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 5,398 சைக்கிள் வினியோகம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அரசு, நிதியு-தவி பள்ளியில், பிளஸ் 1 பயிலும், 6,051 மாணவர், 7,562 மாணவிகள் என, 13,613 பேருக்கு இலவச சைக்கிள் தர பள்ளி கல்வித்துறை சார்பில் நடவ-டிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் இதுவரை, 2,209 மாணவர், 3,189 மாணவிகள் என, 5,398 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. நவம்பரில் இலவச சைக்கிள் வழங்கும் பணி துவங்கியது. தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்-ளிக்கு வரும்போது நிலுவையில் உள்ள சைக்கிள் வழங்கப்பட்டு விடும் என பள்ளி கல்வித்துறை-யினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !