மேலும் செய்திகள்
இருவருக்கு அரிவாள் வெட்டு
03-Nov-2024
அந்தியூர்: அத்தாணி அருகே, சாலையோரம் குப்பைக்கு வைத்த தீயால் ஏற்பட்ட சாலை விபத்தில், தாய் மற்றும் மகன் பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது.ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே சவுண்டப்பூரை சேர்ந்-தவர் கந்தாயாள், 59. இவரின் மகன் பூமேஸ்வரன், 29; அதே பகு-தியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார்.அத்தாணி, செம்புளிச்சாம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்-டுக்கு, தாயுடன் ஹோண்டா சைன் பைக்கில், பூமேஸ்வரன் நேற்று அதிகாலை சென்றார். அங்கிருந்து வீட்டுக்கு காலை, 10:45 மணியளவில் கிளம்பினார். செம்புளிச்சாம்பாளையம் மயானம் அருகே வரும்போது, சாலையோரம் கொட்டியிருந்த குப்பை தீயில் எரிந்து கொண்டிருக்க, புகைமூட்டம் அதிக அளவில் இருந்-தது. இதனால் சாலை தெரியாமல், எதிரே வந்த அரசு டவுன் பஸ் (பி௬-ஏ) மீது டூவீலர் மோதியது. இதில் பூமேஸ்வரன் உடல் நசுங்-கியும், தாய் கந்தாயாள் தலை துண்டாகியும் சம்பவ இடத்தில் பலியாகினர். ஆப்பக்கூடல் போலீசார் இருவரின் உடலை கைப்-பற்றி விசாரிக்கின்றனர்.விபத்தில் பலியான கந்தாயாளுக்கு ஒரு மகள் உள்ளார். அதேச-மயம் பலியான பூமேஸ்வரன், திருமணம் ஆகாதவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
03-Nov-2024