அ.தி.மு.க., அலுவலகம் தாராபுரத்தில் திறப்பு
தாராபுரம்; தாராபுரத்தில் உடுமலை சாலையில், காய்கறி மார்க்கெட் அருகே, அ.தி.மு.க., மாவட்ட அலுவ-லக திறப்பு விழா நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்ட செயலாளர் செல்வகுமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் காங்கேயம் எம்.எல்.ஏ. நடராஜ், மாவட்ட அவைத்தலைவர் காமராஜ், மாவட்ட பொருளாளர்கள் சின்னப்பன், கிஷோர் உள்பட, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.