அந்தியூர் எஸ்.எஸ்.ஐ., மரணம்
அந்தியூர், அந்தியூர் அருகே அம்மாபேட்டை, ஊமாரெட்டியூரை சேர்ந்தவர் கனகராஜ், 52; கடந்த, 1995ல் காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றினார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக அந்தியூர் எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தார். ஒரு மாதமாக உடல் நிலை சரியின்றி மருத்துவ விடுப்பில் இருந்தவர் நேற்று இறந்தார். மறைவுக்கு சக போலீசார், உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.