| ADDED : டிச 10, 2025 10:51 AM
ஈரோடு: ஈரோடு சோலார் புது பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்-டுக்கு வநதுள்ள நிலையில், பயணிகள் வசதிக்-காக ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக கடந்த, 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை விண்ணப்பம் பெறப்பட்-டது. இதில், 477 பேர் விண்ணப்பம் அளித்த நிலையில், மாநகராட்சி கூட்டரங்கில் குலுக்கல் முறையில், ஆட்டோ டிரைவர்கள் தேர்வு செய்யும் நிகழ்வு நேற்று நடந்தது. இதில், 60 ஆட்டோ ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள-தாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். முதலில், 30 ஆட்டோக்கள் இயக்கப்படும். பிறகு தேவைக்கேற்ப மீதி, 30 ஆட்டோ ஓட்டுநர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.