உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நொய்யல் ஆற்றங்கரையில் இரவில் தீ விபத்தால் பகீர்

நொய்யல் ஆற்றங்கரையில் இரவில் தீ விபத்தால் பகீர்

சென்னிமலை: சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையம் வழியாக நொய்யல் ஆறு செல்கிறது. அங்கு கோனாரிகாடு என்ற இடத்தில், ஆற்றின் இடது கரையில் செடி, கொடிகளில் நேற்றிரவு, 7:30 மணி அளவில் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் மரங்களுக்கு பரவி பல அடி உயரத்துக்கு தீப்பிழம்பு கிளம்பியது. அவ்வ-ழியே சென்றவர்கள் பார்த்து, சென்னிமலை தீயணைப்பு நிலை-யத்துக்கு தகவல் தந்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்-துக்கு விரைந்தனர். தீப்பிடித்த இடத்துக்கு தீயணைப்பு வாகனம் செல்ல முடியவில்லை. இதனால் கூடுதலாக குழாய்களை பொருத்தி தண்ணீரை பீய்ச்சி அடித்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் மூன்று பனை மரம், முள்வேலி எரிந்து விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை