பவானிசாகர் அணை நீர்வரத்து 7,611 கன அடியாக அதிகரிப்பு
புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.நேற்று மாலை, 7,611 கன அடி நீர் வரத்தானது. அணை நீர்மட்டம், 88.01 அடி, நீர் இருப்பு 20.3 டி.எம்.சி.,யாக இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1000 கன அடி; குடிநீர் தேவைக்காக 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.