உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொருளாதார மேம்பாட்டுக்கு மானிய உதவி பெற அழைப்பு

பொருளாதார மேம்பாட்டுக்கு மானிய உதவி பெற அழைப்பு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மகளிர், பொருளாதார மேம்பாட்டுக்கு, மானியத்துடன் தொழில் உதவி வழங்கப்படுகிறது.இதில், 10 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பில் உலர் அல்லது ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க, மொத்த விலையில், 50 சதவீதம் அல்லது, 5,000 ரூபாய் மானியத்தொகை வழங்கப்படும். கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 25 வயதுக்கு மேற்பட்ட பெண், பிறப்பு தேதிக்கான சான்று, முன்னுரிமை சான்றுடன், ஈரோடு கலெக்டர் அலுவலகம், 6 வது தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வரும் ஜூலை, 14க்குள் வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ