உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில் கழிவறையில் கிடந்த கஞ்சா

ரயில் கழிவறையில் கிடந்த கஞ்சா

ஈரோடு:அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ், 11ம் தேதி காலை, 9:00 மணிக்கு ஈரோடு ஸ்டேஷன் வந்தது. ஈரோடு மதுவிலக்கு போலீசார் ரயிலில் சோதனை செய்தனர். பெண்கள் பெட்டி கழிவறையில் கேட்பாரின்றி ஒரு பை கிடந்தது. அதை எடுத்து பார்த்தபோது, ௨ கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு, 20 ஆயிரம் ரூபாய். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !