நா.த.க., வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். ஈரோடு பஸ் ஸ்டாண்டில் கட்சியினருடன் நேற்று காலை ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கு தேர்தல் கமிஷனில் முறையாக அனுமதி பெறவில்லை என்று கூறி, தேர்தல் பிரிவு அலுவலர்கள் ஈரோடு டவுன் போலீசில் புகாரளித்தனர். இதன்படி அவர் மீதுவழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் ஈரோடு, சிதம்பரம் காலனியில், வீட்டின் மீது அனுமதி பெறாமல் கட்சிக்கொடியை பறக்க விட்டதாக, தி.மு.க.,வை சேர்ந்த பிரகாஷ் மீது, டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.