உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லாட்ஜில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல்

லாட்ஜில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல்

ஈரோடு: ஈரோட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில் இருந்து, கை துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஈரோடு, சத்தி சாலையில் உள்ள லாட்ஜ் ஒன்றின் அறையில், நாட்டு கை துப்பாக்கி, ஆறு தோட்டாக்கள் தலையணைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், வட மாநில வாலிபர் அறை எடுத்து தங்கி உள்ளதாகவும், போலீசாருக்கு புகார் சென்றது. ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். அறையில் தங்கி இருந்த நபர் குறித்து பதிவேடுகள், 'சிசிடிவி' கேமராக்கள் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டுள்-ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை