மேலும் செய்திகள்
வாரிய தலைவர் பதவிகள் எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம்
30-Apr-2025
ஈரோடு :உலமாக்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கூறிய புகாரில் சிக்கிய காங்., பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.ஈரோடு மாநகர் மாவட்ட கமிட்டி சிறுபான்மை பிரிவு தலைவராக ஜூபைர் அகமது பதவி வகித்து வந்தார். இவர் உலமாக்கள், 11 பேரிடம் பணம் பெற்று, இரட்டிப்பு செய்து தருவதாக கூறி, 2.75 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.இந்நிலையில், காங்., மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் பதவி வகித்து வந்த ஜூபைர் அகமது, கட்சிக்கு கலங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக கூறி, அவரை நீக்கம் செய்து, மாநில தலைவர் முகம்மது ஆரீப் உத்தரவிட்டுள்ளார்.
30-Apr-2025