உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குடிசை வீடு சாம்பல்

குடிசை வீடு சாம்பல்

பவானி: குருவரெட்டியூர் அருகே ஏலுாரை சேர்ந்தவர் கிருஷ்ணன், 33; கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். பெற்றோர் இல்லாத நிலையில் குடிசை வீட்டில் வசிக்கிறார். கிருஷ்ணன் நேற்று காலை வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் வீடு முற்றிலும் தீப்பற்றி எரிந்தது. அந்தியூர் தீய-ணைப்பு நிலைய வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்-களும் எரிந்து சாம்பலானது. விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ