மகள் மாயம்: தந்தை புகார்
மகள் மாயம்: தந்தை புகார்ஈரோடு, டிச. 8-கொடுமுடி, வெள்ளோட்டம்பரப்பு, வடுகனுாரை சேர்ந்த விவசாயி அய்யாசாமி மகள் மவுனிகா, 17; கரூரில் தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் மதியம் கோவிலுக்கு சென்றவர், பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அய்யாசாமி புகாரின்படி, மலையம்பாளையம் போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.