உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்: போலீசில் தந்தை புகார்

மகள் மாயம்: போலீசில் தந்தை புகார்

ஈரோடு, ஈரோடு, சாணார்பாளையம் குமார் மகள் ஷோபிகா, 21. பி.எஸ்.சி., கணிதம் படித்து விட்டு, 20 நாட்களாக வீட்டில் இருந்தார். பவானியில் உள்ள, பெரியம்மா வளர்மதி வீட்டுக்கு சென்று வருவதாக கூறி கடந்த, 19 காலை 6:00 மணிக்கு வீட்டில் இருந்து சென்றார். பின்னர் குமார், வளர்மதிக்கு போன் செய்த போது ஷோபிகா வரவில்லை என தெரிவித்துள்ளார். ஷோபிகாவிற்கு குமார் போன் செய்தார். போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. உறவினர்கள், அக்கம் பக்கத்தில் விசாரித்தும் மகள் குறித்து தகவல் இல்லை. மாயமான மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என மலையம்பாளையம் போலீசில் குமார் புகார் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை