உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேலைவாய்ப்பு பயிற்சி பதிவு செய்ய அவகாசம்

வேலைவாய்ப்பு பயிற்சி பதிவு செய்ய அவகாசம்

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரத-மரின் இன்டன்ஷிப் திட்டத்தில், முன்னணி நிறுவனங்களில் ஊக்-கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படு-கிறது. இப்பயிற்சிக்கு மாணவர்கள் பதிவு செய்வதற்கான கால அளவு, வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ்2, ஐ.டி.ஐ., - டிப்-ளமோ மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு படித்து, தேர்ச்சி பெற்-றவர்களுக்கு ஓராண்டு தொழிற்பயிற்சி அளித்து, நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கு, மாதந்தோறும் ஐந்-தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் பயிற்சி காலத்தில் ஒரு-முறை உதவித்தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.இதற்கான வயது வரம்பு, 21 முதல் 24 வயது வரை நிர்ணயிக்கப்-பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, https://pminternship.mca.gov.in/login என்கிற முகவரியை பார்வையி-டலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ