உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பார்வையற்ற முதியவரை பறித்து கொண்ட மரணம்

பார்வையற்ற முதியவரை பறித்து கொண்ட மரணம்

பவானி: பவானி, காளிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் அம்மாசை, 61; கண் பார்வை சரியாக தெரியாத நிலையில், திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்தார், பவானி, காளிங்கராயன்பா-ளையம், லட்சுமிநகரில் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார். அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. உறவினர்களுக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாத்-திரம் கழுவும் சிங்க்கில் தலைகவிழ்ந்து இறந்திருந்தார். இறந்து சில நாட்களான நிலையில் துர்நாற்றம் வீசியதால் தெரிய வந்தது. சித்தோடு போலீசார் உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை