உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேர்தல் வாக்குறுதியை தி.மு.க., நிறைவேற்ற வலியுறுத்தல்

தேர்தல் வாக்குறுதியை தி.மு.க., நிறைவேற்ற வலியுறுத்தல்

ஈரோடு: ''தேர்தல் வாக்குறுதிப்படி டாஸ்மாக் கடைகளை அரசு குறைக்க வேண்டும்,'' என்று, அனைத்திந்திய மாதர் சங்க மாநில பொது செயலாளர் ராதிகா, ஈரோட்டில் கூறினார்.ஈரோட்டில் நேற்று அவர் கூறியதாவது: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை, தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்-படுத்தி உள்ளது. இதில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் கைது செய்ய வேண்டும். மாணவி சுய விபரம் வெளி-யிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கு மண்டலத்தில், 10 ஆண்டுகளில் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது. கிராமங்கள் முதல் பள்ளிகள் வரை போதை கலாசாரம் உள்ளது. தேர்தல் வாக்குறுதி-படி டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை தி.மு.க., அரசு குறைக்க வேண்டும். போக்சோ வழக்குகளில் கலெக்டர் தலை-மையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டும். இவ்-வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை