டி.ஒய்.எப்.ஐ., சங்கத்தினர் பவானியில் ஆர்ப்பாட்டம்
பவானி, டிச. 24-இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பவானி அந்தியூர் பிரிவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். பவானி தாலுகா அலுவலகத்தில் கழிப்பறை கட்ட வேண்டும், அம்ரூத் திட்டத்தை தாமதமின்றி முடிக்க வேண்டும். பவானி புது பஸ் ஸ்டாண்டில் கழிப்பறை கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.