ஈரோடு டைஸ்- கெமிக்கல்ஸ் மெர்ச்சென்ட்ஸ் பொன் விழா
ஈரோடு: ஈரோடு டைஸ் அன்ட் கெமிக்கல்ஸ் மெர்ச்செண்ட்ஸ் அசோசி-யேஷன், 50ம் ஆண்டு பொன் விழா ஈரோட்டில் நேற்று நடந்தது. விழாவை சங்கத்தின் கவுரவ தலைவரும், ஈரோடு ஸ்வஸ்திக் கார்ப்பரேஷன் நிறுவனருமான லிங்கமூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பொன் விழா குழு தலைவர் செங்குட்டுவன், செயலாளர் மலைச்-சாமி முன்னிலை வகித்தனர். முன்னதாக சங்கத் தலைவர் ராஜ-மாணிக்கம் வரவேற்றார். ஈரோடு எம்.பி., பிரகாஷ், சங்கத்தின் பொன் விழா ஆண்டு மலரை வெளியிட்டு பேசினார். தி சென்னை சில்க்ஸ் தலைவர் விநாயகம், சட்ட ஆலோசகர் ராஜ-சேகரன் பேசினர்.மாலையில் நடந்த நிகழ்ச்சிகளை சங்கத்தின் கவுரவ தலைவர் கந்-தசாமி தொடங்கி வைத்தார். சென்னை பொன் ப்யூர் கெமிக்கல்ஸ் தலைவர் பொன்னுசாமி, 'வணிகத்தில் உச்சம் தொடுவது எப்-படி?' என்ற தலைப்பில் பேசினார். சங்கத்தின் முன்னாள் நிர்வா-கிகள், அவர்களது வாரிசுதாரர்கள் கவுரவிக்கப்பட்டு நினைவுப்ப-ரிசு வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. சங்க பொரு-ளாளர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார். சங்க நிர்வாகிகள், உறுப்-பினர்கள், குடும்பத்தினர் விழாவில் கலந்து கொண்டனர்.