ரூ.97 லட்சம் மதிப்பில் விரிவாக்க பணிகள்
ஈரோடு: திண்டலை அடுத்த வேப்பம்பாளையம் பிரிவில், நெடுஞ்சாலை துறை சார்பில், 97 லட்சம் ரூபாய் மதிப்பில், சாலை விரிவாக்கம் மற்றும் சாலை நடுவில் தடுப்பு அமைத்து செடிகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலையின் இருபுறமும் தலா, 7.5 மீ., விரிவாக்கம் செய்யப்படுகிறது. வேப்பம்பாளையம் பஸ் நிறுத்தத்தில், பெருந்துறை சாலையின் இருபகுதியிலும், ௨.௫ மீ., அகலத்தில் தனித்தடுப்பு அமைக்கப்படுகிறது. தற்போது, 50 சதவீத பணி முடிந்துள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.