மேலும் செய்திகள்
ரயில்வே ஸ்டேஷனில் துாய்மைப்பணி
18-Nov-2024
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், நான்கு பிளாட்பார்ம்கள் உள்ளன. தினமும், 55 ரயில்கள் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பய-ணிகள் ரயில்வே ஸ்டேஷனில் அடியெடுத்து வைக்கின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் அம்ருத் பாரத் திட்டத்தில், ரயில்வே ஸ்டேஷனில் பல கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கப்-பணி நடக்கிறது. இதன் ஒரு கட்டமாக நடைமேம்பாலம் அமைக்கும் பணி துரித கதியில் நடக்கிறது.இதுகுறித்து ரயில்வே ஊழியர்கள் கூறியதாவது: நடைமேம்பா-லத்தால் பயணிகள் எளிதாக அனைத்து பிளாட்பார்ம்களுக்கும் சென்று வரலாம். ஏற்கனவே ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பிர-தான படிகட்டுகள், எஸ்கலேட்டர், லிப்ட் வசதி உள்ளது. கூடுத-லாக நடைமேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதில் துாண்கள் அமைக்கும் பணி நிறைவு பெரும் தருணத்தை எட்டியுள்ளது. விரைவில் நடைமேம்பால இணைப்பு பணி துவங்கி நடை-பெறும். விரைவில் பணி முடித்து, பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு கூறினர்.
18-Nov-2024