உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எல்லையில் கொட்டப்படும் குப்பையால் தொல்லை

எல்லையில் கொட்டப்படும் குப்பையால் தொல்லை

பவானி, ஆப்பக்கூடலில் இருந்து -பவானி செல்லும் சாலையில், நல்லாநாயக்கனுார் பிரிவில், சாலையோரத்தின் இருபுறங்களிலும் குப்பை விக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி ஆப்பக்கூடல் டவுன் பஞ்., மற்றும் ஒரிச்சேரி பஞ்., எல்லையாக உள்ளது. இதனால் குப்பை போட்டு சென்று விடுகிறார்கள். இதனால் அப்பகுதி குப்பை மேடாக காட்சியளிக்கிறது. அவ்வப்போது துார்நாற்றமும் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பையை அகற்றி, குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ