உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

காந்தி சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதைஈரோடு, அக். 3-காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, கருங்கல்பாளையத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கும் மாலை அணிவித்தனர். இதேபோன்று, மாநகர தி.மு.க., செயலாளர் சுப்ரமணியம், 40வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ரமேஷ்குமார் மற்றும் தி.மு.க., இளைஞரணி அணி நிர்வாகிகள் பலர், காந்தி சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ