அரசு பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு
ஈரோடு, :தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, ஆன்லைனில் தொடங்கி நடந்து வருகிறது. அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் தலைமை வகித்தார். இதில் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான கலந்தாய்வில், 16 இடங்களுக்கு, 35 பேர் மாற்றம் கோரி விண்ணப்பித்திருந்தனர். உயர்நிலைப்பள்ளிகளில், 29 இடங்களுக்கு, 15 பேர் மாறுதல் கேட்டிருந்தனர். இன்று தலைமையாசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வு நடக்கிறது.