உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மயங்கி விழுந்தவர் சாவு

மயங்கி விழுந்தவர் சாவு

பவானி: பவானி, வைரமங்கலத்தை அடுத்த ஜி.டி.நாயுடு காலனியை சேர்ந்தவர் குருசாமி, 57; மொபட்டில் ஊர் ஊராக சென்று மக்காச்சோளம் விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் அம்மாபேட்டை-மேட்டூர் ரோட்டில் மொபட்டில் சோளக்கருது மூட்டையுடன் சென்றபோது மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த மக்கள் அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி