உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

அந்தியூர், அந்தியூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லுாரி வணிகவியல் துறை தலைவர் நாராயணசாமி வரவேற்றார். ஆங்கிலத்துறை தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். முதல்வர் நிர்மலாதேவி துவக்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட பிளஸ் 2 மாணவர்களுக்கு, கல்லுாரி பாடப்பிரிவு, பாடப்பிரிவில் உள்ள வேலைவாய்ப்பு, வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி விளக்கம் அளிக்கப்பட்டது. விரிவுரையாளர்கள் சிவராஜ், கவுதமி செல்வி, நித்யாதேவி மற்றும் அந்தியூர் சுற்று வட்டாரத்திலுள்ள 100க்கும் மேற்பட்ட பி ளஸ் 2 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை