உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெள்ளோடு மாரியம்மன் கோவிலுக்கு புனித தீர்த்தம்

வெள்ளோடு மாரியம்மன் கோவிலுக்கு புனித தீர்த்தம்

வெள்ளோடு மாரியம்மன்கோவிலுக்கு புனித தீர்த்தம்சென்னிமலை, டிச. 11-வெள்ளோடு மாரியம்மன் கோவிலில், பொங்கல் விழா இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் நேற்று புனித நீர் எடுத்து வந்தனர். மாலையில் அண்ணமார் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் நடந்தது. இன்று ஆறுகரை குல பெண்கள், மாவிளக்கு எடுத்து வருதல் மற்றும் பெருஞ்சலங்கை ஆட்டம் நடக்கிறது. மதியம் பொங்கல் வைபோகம் நடக்கிறது. இரவில் கலை நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் வெள்ளோட்டை சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை