கீழ்பவானி வாய்க்காலில் மனித எலும்பு கூடு
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே மாந்தபுரம் பகு-தியில் கீழ்பவானி பாசன வாய்க்கால் செல்கிறது. நேற்று முன்-தினம் வாய்க்கால் தண்ணீரில், மனித எலும்பு கூடு மிதந்துள்ளது. பெண் ஒருவர் அளித்த புகார்படி, தீயணைப்பு வீரர்கள் எலும்பு கூடை மீட்டனர். எலும்பு கூடு ஆணா பெண்ணா என தெரிய-வில்லை. வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசி உள்ளனரா என்பது குறித்து, வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்-றனர்.