25 ஆண்டாக அதிகரிப்பு
தேசிய பறவையான மயில் எண்ணிக்கை, 25 வருடமாக அதிகரித்து வருகிறது. அவை இன்று ஒரு இடத்திலும், நாளை மற்றொரு இடத்திலும் குருவிகள் போல இடம் மாறக்கூடியவை.இதனால் துல்லியமாக கணக்கெடுக்க முடியாது. மயில்களின் பெருக்கம் நரிகளால் கட்டுப்பாடானது. தற்போது நரிகளின் இனப்பெருக்கம் அழிந்து விட்டது. சென்னிமலை போன்ற வனத்திலேயே நரிகள் அதிகமில்லை.சுதந்திரமாக திரியும் மயில்களை இடம் மாற்றுவது சாத்தியம் இல்லாதது. நரிகளின் பெருக்கத்துக்கான நடவடிக்கை மூலமாக, மயில்களின் பெருக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.- வனத்துறை அதிகாரி