உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பசுமை பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்தல்

பசுமை பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்தல்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் சார்பில், துாய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஈரோடு நாடார்-மேட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்-வலர்கள், துாய்மை நகரங்களுக்கான மக்கள் இயக் கம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொ-ழியை எடுத்துக் கொண்டனர். பின்னர், சுற்றுச்சூ-ழலுக்கு தீங்கு விளைவிக்கும் பட்டாசுகளை தவிர்த்து, பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை