உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தலைமை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கிய நீதிபதி

தலைமை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கிய நீதிபதி

ஈரோடு, தமிழ்நாடு பள்ளி கல்வி ஓய்வு பெற்ற அலுவலர்கள் அமைப்பின், 10ம் ஆண்டு விழா ஈரோட்டில் மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரும், நீதிபதியுமான மணிக்குமார் தலைமையில் நடந்தது. கலெக்டர் கந்தசாமி முன்னிலை வகித்தார். நீதிபதி மணிக்குமார், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கம் குறித்து பேசினார். பின்னர் மாணவியரிடம் இதுபற்றி கலந்துரையாடினார். பின்னர் சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார். முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை