சிவன்மலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை துவக்கம்
காங்கேயம், நவ. 1-காங்கேயம் அடுத்துள்ள, சிவன்மலை சுப்ரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடங்குகிறது.திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே அருணகிரிநாதர் திருப்புகழ் படிக்கும் வாசல் என்று போற்றப்படும், சிவன்மலையில் உள்ள சுப்ரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, நாளை (நவ.,2) தொடங்கி, நவ., 9 வரை ஒரு வாரம் நடைபெறுகிறது.காலை 10:30 மற்றும் மாலை 4:00 மணி ஆகிய நேரங்களில் அபிஷேக ஆராதனை, திருவீதி உலா, சூரசம்ஹார விழா, முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. சுவாமி மலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.