உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.40 லட்சம் மோசடி கேரள வாலிபர் கைது

ரூ.40 லட்சம் மோசடி கேரள வாலிபர் கைது

ஈரோடு: ஈரோடு ரயில்வே காலனியை சேர்ந்த கல்யாண சுந்தரம், ஆன்லைன் இன்வெஸ்ட்மெண்ட் மோசடியில், 23 லட்சம் ரூபாயை இழந்தார். இதேபோல் ஈரோடு சம்பத் நகரை சேர்ந்த ராம்குமார், 17 லட்சத்தை இழந்துள்ளார். ஈரோடு சைபர் க்ரைம் போலீசில் இருவரும் புகார் செய்தனர். விசாரித்த போலீசார், கேரள மாநிலம் மலப்புரம், நிலம்பூரை சேர்ந்த சகீர்கான், 32, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, ௮.௯௫ லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ