உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுப்பிரமணியர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

சுப்பிரமணியர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியர் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்து இரண்டாண்டு நிறைவுற்ற நிலையில், ஆண்டு விழா நேற்று நடந்தது. முன்னதாக திரளான பக்தர்கள், 108 கலசங்களை ஏந்தி கோவிலுக்கு ஊர்வலமாக வந்-தனர். மூலவர் சுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் வள்ளி-தெய்வானையுடன் உற்சவர் சுப்பிரமணியர், உட்-பிரகார மண்டபத்தில் எழுந்தருளினார். அலங்கரிக்கப்பட்ட சப்ப-ரத்தில் கோவில் உலா நடந்தது. காவடி ஆட்டம் ஆடி பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !