டெங்கு காய்ச்சலுக்கு கூலி தொழிலாளி பலி
பவானி, அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர், கல்லகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் குணசேகரன், 45; கூலி தொழிலாளி. கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.டெங்கு என உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இறந்து விட்டார். இதை தொடர்ந்து குருவரெட்டியூர் சுகாதாரத்துறையினர், கிராமத்தில் முகாமிட்டு சுகாதார பணிகளில் ஈடுபட்டனர்.