பெண் தொழிலாளிக்குதொல்லை தந்தவர் கைது
டி.என்.பாளையம்:-டி.என்.பாளையம் குமரன் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வி, 41; கட்டட கூலி தொழிலாளி. கள்ளிப்பட்டி அருகேயுள்ள பெருமுகை புதுார் ஏரங்காட்டூரை சேர்ந்தவர் மாரிமுத்து, 32; செல்வி வீட்டு முன் குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசி வந்துள்ளார்.அவர் திட்டியவுடன் சென்று விடுவது வழக்கமாக இருந்தது. இதேபோல் நேற்று வீட்டு முன்பு நின்று பேசிய மாரிமுத்து-வை, செல்வி திட்டியுள்ளார். இதனால் செல்வியை கையை பிடித்து இழுத்து தள்ளி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி பங்களாப்புதுார் போலீசார், மாரிமுத்துவை கைது செய்து, கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.