நீதிமன்ற ஊழியருக்கு மருத்துவ முகாம்
காங்கேயம், காங்கேயம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான சந்தான கிருஷ்ணசாமி முகாமை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி மாலதி, குற்றவியல் நடுவர் தேன்மொழி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். வழக்கறிஞர், நீதிமன்ற ஊழியர், மக்கள் என, 170க்கு மேற்பட்டோர் பயன் பெற்றனர்.