பஞ்., செயலர்களுக்கு எம்.எல்.ஏ., அறிவுரை
பெருந்துறை: பெருந்துறை யூனியனில், 29 பஞ்., செயலர் மற்றும் தனி அலுவலர் கலந்து கொண்ட ஆய்வுகூட்டம், யூனியன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., ஜெயக்குமார் தலைமை வகித்து பேசினார். பஞ்.,களில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க முன்னுரிமை கொடுத்து செயலர்கள் பணியாற்ற வேண்டும். தொகுதிக்கு உட்பட்ட, 72 பஞ்சாயத்துக்களிலும் விரைவில் நான்கு பஞ்., வீதம் கூட்டம் நடத்தி, மக்களின் அத்யாவசிய தேவைகளுக்கு தீர்வு காணப்படும் என்று பேசினார்.