உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேசிய உறைவாள் போட்டிக்கு நம்பியூர் மாணவர் தேர்வு

தேசிய உறைவாள் போட்டிக்கு நம்பியூர் மாணவர் தேர்வு

நம்பியூர்,: நம்பியூர் அருகேயுள்ள பட்டி மணியக்காரன் பாளையம் அரசு மாதிரி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் சிபி. இவர் அரியானாவில் நடக்கும் தேசிய அளவிலான உறைவாள் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இதற்காக அரியானா செல்லும் மாணவரின் பயண செலவுக்காக, பள்ளி மேலாண்மை குழு மற்றும் மாதிரிப்பள்ளி ஆசிரியர்கள் இணைந்து, 12 ஆயிரம் ரூபாய் வழங்கினர். நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசே-கரன், துணை தலைமை ஆசிரியர் பொன்னுசாமி, வளர்ச்சி சமூக மேம்பாட்டு இயக்க நிர்வாகிகள் பன்னீர்செல்வம், கிருத்திகா, சக்-திவேல், சசிகுமார் மற்றும் உமாசங்கர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி