உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு வி.இ.டி., கல்லுாரியில் நோபல் உலக சாதனை

ஈரோடு வி.இ.டி., கல்லுாரியில் நோபல் உலக சாதனை

ஈரோடு ஈரோடு திண்டலில் உள்ள, வி.இ.டி., கல்லுாரியில், 1,660க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைத்தறி துறையை பிரபலப்படுத்துவதற்காக, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற ராட்டை வடிவத்தில் கல்லுாரி மைதானத்தில், 1 மணி நேரம் நின்றனர்.தாளாளர் எஸ்.டி. சந்திரசேகர் பேசுகையில், ''கைத்தறி மற்றும் அதன் நிலையான வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, தேசிய கைத்தறி தினத்தன்று இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த உலக சாதனை நிகழ்வின் முக்கிய நோக்கங்கள் வறுமையை ஒழித்தல், நல்ல சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை அடைதல், தரமான கல்வி, பாலின சமத்துவம், ஒழுக்கமான வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தி ஆகியவை. இது ஐ.நா.வின், 17 இலக்குகளில் சில. இளைஞர்கள் மூலம் கைத்தறி துறையை பாதுகாப்பது அந்த நோக்கத்தை அடையும், நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும்,'' என்றார்.முதல்வர் டாக்டர். நல்லசாமி, டீன் டாக்டர் லோகேஷ் குமார் வரவேற்றனர். நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன தலைமை இயக்க அதிகாரி வினோத், தேசிய நடுவர் ஜனனி ஸ்ரீ, மாநில நடுவர் ஆனந்த முருகன், கைத்தறி உதவி இயக்குனர் சரவ்கனன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிடிஎப் தொழில்நுட்ப துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில், அரசு கைத்தறி துறை கல்லுாரியில், 2 நாள் சிறப்பு கைத்தறி கண்காட்சியை நடத்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !