உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / செவிலியர்கள் தர்ணா

செவிலியர்கள் தர்ணா

ஈரோடு, தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில், ஈரோடு மாவட்ட தலைவர் ஜெயசுகி தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகிகள் தமிழ்செல்வி, அர்னால்டு பிரவுன், கண்ணன் பேசினர். சம வேலைக்கு, சம ஊதியம் எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீதான மேல்முறையீடு வழக்கை கைவிட வேண்டும். எம்.ஆர்.எஸ்., தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதி, 356ஐ உடன் நிறைவேற்ற வேண்டும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்