உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி பலி

வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி பலி

ஈரோடு: ஈரோடு, கோணவாய்க்கால், மோகன்தோட்டம் பகுதியில், காலிங்கராயன் வாய்க்காலில், பெண் பிணம் மிதப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். ஈரோடு, கருங்கல்பாளையம், கமலாநகர் நான்கா-வது வீதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ரங்கம்மாள், 69, என்பதும், வாய்க்காலில் குளித்தபோது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்ததும் தெரிந்தது. ஈரோடு அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ