ஓய்வூதியம் கோரி முறையீடு
ஓய்வூதியம் கோரி முறையீடுஈரோடு, டிச. 10-துப்புரவு பணியாளர் மற்றும் துாய்மை காவலர் சங்கம் சார்பில், மாநில தலைவர் சண்முகம் மற்றும் தொழிலாளர்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது:பஞ்சாயத்துக்களில் பணி செய்யும் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி ஆப்ரேட்டர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு, 50,000 ரூபாய் தொகுப்பு தொகை, 2,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பஞ்சாயத்துக்களில், 30 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்து வரும் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி பணியாளர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்குவதால், அவர்களது வாழ்வாதாரம் உயரும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.