மேலும் செய்திகள்
சுடுகாட்டை பட்டாவாக மாற்றி வழங்க கோரிக்கை
25-Nov-2025
ஈரோடு: பெருந்துறை தாலுகா சுள்ளிப்பாளையம், சக்தி நகர், லட்சுமி-புரம், ஐயப்ப நகர் பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலக-த்தில் மனு வழங்கி கூறியதாவது: எங்களது பகுதியில், 7,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவ்வீடுகளில், 5,000 வீடுகளுக்கு கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. எங்களைப்போன்று, 2,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கூட்டு குடிநீர் திட்ட இணைப்பு வழங்க-வில்லை. ஆனால், அதற்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது. போர்வெல் குடிநீர் குடிக்க, சமைக்க பயன்படுத்த சிரமமாக உள்ளதால், கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர் இணைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
25-Nov-2025