உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிளஸ் 2 துணை தேர்வு துவக்கம் ஈரோட்டில் 52 பேர் ஆப்சென்ட்

பிளஸ் 2 துணை தேர்வு துவக்கம் ஈரோட்டில் 52 பேர் ஆப்சென்ட்

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், நான்கு மையங்களில் நடந்த பிளஸ் 2 துணை தேர்வு தமிழ் பாடத் தேர்வில் 52 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.தமிழகத்தில், பிளஸ் 2 துணை தேர்வு நேற்று தொடங்கியது. ஜூலை 2 வரை தேர்வு நடக்கிறது. இம்மாவட்டத்தில், ஈரோட்டில் கலைமகள் கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பவானியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோபியில் வைரவிழா மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலத்தில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி என, நான்கு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று தமிழ் மொழி பாடத் தேர்வு நடந்தது. மொத்தம், 164 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 112 பேர் தேர்வு எழுதினர். 52 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ