உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2 வாலிபர்கள் மீது போக்சோ வழக்கு

2 வாலிபர்கள் மீது போக்சோ வழக்கு

ஈரோடு,அந்தியூர் சனிசந்தையை சேர்ந்தவர் விக்ரம், 24; பவானியை சேர்ந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தார். குழந்தைகள் நலகுழுவினர் அளித்த புகாரின்படி, விக்ரம் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில், பவானி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்தனர்.* ஈரோடு நாடார்மேட்டை சேர்ந்தவர் சந்தோஷ், 22; ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில் ஏழு மாத கர்ப்பமாக உள்ளார். குழந்தைகள் நலக்குழு புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வழக்குப்பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை