உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போலீஸ்-வனத்துறை ட்ரோனில் கண்காணிப்பு

போலீஸ்-வனத்துறை ட்ரோனில் கண்காணிப்பு

புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஆடு திருட்டு, கள்ளச்சாராயம், கஞ்சா, சட்டவிரோத நாட்டு துப்பாக்கி பயன்பாடு, வெடிமருந்து வைத்திருத்தல் ஆகியவற்றை கண்காணிக்க, குற்றங்களை தடுக்கும் விதமாக, பவானிசாகர் அருகே பெரிய கள்ளிப்பட்டி ஊராட்சி கன்றாமொக்கை கிராமத்தில், ட்ரோன் மூலம் குற்ற நேற்று கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டது. சத்தி டி.எஸ்.பி., முத்தரசு தொடங்கி வைத்தார். ட்ரோன் மூலம் வனத்துறை மற்றும் போலீசார் இணைந்து தொடர்ச்சியாக கண்காணிப்பில் ஈடுபடுவர். பவானிசாகர் இன்ஸ்பெக்டர் அன்னம், போலீசார், வனத்துறையினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி