உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாக்கடை பிரச்னைக்கு தீர்வு கேட்டு மறியல்

சாக்கடை பிரச்னைக்கு தீர்வு கேட்டு மறியல்

கோபி, கவுந்தப்பாடி பஞ்., பழனிச்சாமி வீதி, முதலியார் வீதி மற்றும் நல்லாகவுண்டனுாரில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் சாக்கடையில் கழிவு நீர் வெளியேறாததை கண்டித்து, கவுந்தப்பாடி-ஆப்பக்கூடல் சாலையில், 60க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், கவுந்தப்பாடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கவே அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை